‘தனியாக இருக்கும்போது அவற்றைப் பார்ப்பேன்’ – சம்யுக்தா மேனன்

‘தனியாக இருக்கும்போது அவற்றைப் பார்ப்பேன்’ – சம்யுக்தா மேனன்


சென்னை,

நடிகை சம்யுக்தா மேனன் தற்போது மிகவும் பிஸியான நடிகைகளில் ஒருவராக உள்ளார். பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அகண்டா 2 படத்தில் நடித்திருந்த இவர் தற்போது , ஷர்வானந்துக்கு ஜோடியாக “நரி நரி நடுமா முராரி” படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 14-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

சமீபத்தில் படத்தின் புரமோஷன்களில் கலந்துகொண்ட சம்யுக்தா மேனன் பல சுவாரஸ்யமான விஷயங்களை வெளிப்படுத்தினார். தனியாக இருக்கும்போது வெப் தொடர்களைப் பார்ப்பது தனக்கு மிகவும் பிடிக்கும், குறிப்பாக நெட்பிளிக்ஸ் தொடர்களைப் பார்ப்பது தனக்கு மிகவும் பிடிக்கும் என்று அவர் கூறினார்.

ஒரு தொடர் தனக்குப் பிடித்திருந்தால், முடியும் வரை அதைப் பார்ப்பேன் என்றும் சமீபத்தில் வெளியான ‘வென்ஸ்டன்டே’ தொடர் தனக்கு மிகவும் பிடித்திருந்தது எனவும் கூறினார். அவரது இந்த கருத்துகள் வைரலாகி வருகின்றன.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *