ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை

சென்னை,
திருமண புகார் வழக்கு நடந்துவரக்கூடியநிலையில், ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஜாய் கிரிசில்டாவுக்கு இன்று அதிகாலை ஆண் குழந்தை பிறந்ததாக தெரிகிறது. இதனை அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
குழந்தை பிறந்திருப்பதால் ஜாய் கிரிஸ்டில்டா தரப்பில் இன்று விசாரனைக்கு நேரில் ஆஜராக முடியாமல் கால அவகாசம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இன்று மதியம் மாதம்பட்டி ரங்கராஜ் மட்டும் ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.






