ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு…..பெரும் சோகத்தில் விஜய் ரசிகர்கள்

ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு…..பெரும் சோகத்தில் விஜய் ரசிகர்கள்


சென்னை,

விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜன நாயகன். இந்த திரைப்படம் நாளை மறுதினம் (9ம் தேதி) திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, ஜன நாயகன் படத்திற்கான தணிக்கை சான்றிதழை தணிக்கை வாரியம் இதுவரை வழங்கவில்லை. இது தொடர்பாக பட நிறுவனம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டு ஜன நாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கில் நாளை மறுதினம் தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், ஜன நாயகன் திரைப்படம் நாளை மறுதினம் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் வழக்கில் நாளை மறுதினம் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்க உள்ளது. இதனால், ஜன நாயகன் திரைப்படம் நாளை மறுதினம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் 9ம் தேதி ஜன நாயகன் ரிலீஸ் ஆகாது என விநியோகஸ்தர் அறிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, ஸ்பெயின், நார்வே, போலந்து உள்பட 39க்கும் அதிக நாடுகளில் ஜனநாயகன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவிலும் 9ம் தேதி படம் வெளியாகாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதனால் விஜய் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். படத்துக்கான டிக்கெட்டுகளை பெற்று ஆவலுடன் இருந்த விஜய் ரசிகர்களும் ஏமாற்றமடைந்துள்ளனர். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *