கவுண்ட்டவுன் தளத்தை தொடங்கிய பிடிஎஸ் இசைக்குழு

கவுண்ட்டவுன் தளத்தை தொடங்கிய பிடிஎஸ் இசைக்குழு


இசை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த இசைக்குழுக்களில் தென்கொரியாவின் பிடிஎஸ்-ம் ஒன்று. இளைஞர்களின் உணர்வுகளுடன் ஒன்றிணையும்படியான வரிகளை தங்களது பாடல்களில் புகுத்தியதன் மூலம் உலகம் முழுவதும் பிடிஎஸ் குழு பிரபலமடைந்தனர். அவர்களின் தோற்றமும், பாடல்களும், இசையும் உலகளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றது.

தென்கொரிய அரசு விதிப்படி அந்நாட்டு இளைஞர்கள் அனைவரும் கட்டாயம் ராணுவத்தில் இணைந்து பயிற்சி மேற்கொண்டு பணியாற்ற வேண்டும். இதில் கே-பாப் கலைஞர்களும் விதிவிலக்கல்ல. அதன்படி பிடிஎஸ் உறுப்பினர்களும் ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஜின், ஜே-ஹோப், ஆர்எம், வி , ஜிமின், ஜங்கூக் மற்றும் சுகா ஆகியோர் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராணுவ பணியை நிறைவு செய்து மீண்டும் பிடிஎஸ் இசைக்குழுவில் இணைந்துள்ளனர்.

கடைசியாக பிடிஎஸ் குழுவினர் 2022-ல் ‘ப்ரூப்’ எனும் ஆல்பத்தை வெளியிட்டிருந்தார்கள். தற்போது மார்ச் 20ம் தேதி தங்களது புதிய ஆல்பம் வெளியாகுமென அறிவித்துள்ளனர். இந்தக் குழுவில் மொத்தமாக 7 நபர்கள் இருக்கிறார்கள். மூன்றாண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பிடிஎஸ் இசைக்குழு புதிய ஆல்பம் வெளியிடவுள்ளதை அடுத்து, பிரத்தியேக கவுண்ட்டவுன் தளத்தை தொடங்கியுள்ளது. இதன்மூலம், ‘2026bts.com’ என்ற தளத்தை அறிமுகம் செய்துள்ளது. 2026-ம் ஆண்டின் பிற்பகுதியில் பிடிஎஸ் உலகளாவிய இசைப் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக ‘பிரைட் மியூசிக்’ நிறுவனம் அறிவித்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *