''இளவரசியைப்போல் உணர்கிறேன்'' – நடிகை பிரியா

சென்னை,
தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரமான பரியா அப்துல்லா, கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ”ஜாதி ரத்னலு” படத்தின் மூலம் அறிமுகமானார்.
குறுகிய காலத்தில், அங்கீகாரத்தைப் பெற்ற அவர், ராவணசுரா மற்றும் லைக், ஷேர் & சப்ஸ்கிரைப் போன்ற படங்களில் தனித்துவமான நடிப்பால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.
பரியா அப்துல்லா கடைசியாக பச்சல மல்லியில் நடித்திருந்தார். இப்படத்தில் அவருடன் அல்லரி நரேஷ், அம்ரிதா ஐயர் மற்றும் அங்கித் கோய்யா ஆகியோர் நடித்தனர். தற்போது அவர், ”எதோட்டிசெய்குர்ராம்பாபிரெட்டி”. இப்படத்தை முரளி மனோகர் ரெட்டி எழுதி இயக்குகிறார்.
பரியா படங்களில் மட்டுமில்லாமல், சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி தனது புகைப்படங்களை அதில் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் அவர் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனுடன், அவர் தான் இளவரசியைபோல உணர்வதாக தெரிவித்திருக்கிறார்.