”இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்” – நடிகர் சசிகுமார் கோரிக்கை|”Sri Lankan Tamils should be granted citizenship”

சென்னை,
தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு நடிகர் சசிகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோமோல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் பிரீடம் திரைப்படம் வருகிற 10ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சசிகுமார், வெளிநாடுகளில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுப்பதாகவும், தமிழ் மொழி பேசுபவர்கள் வேறு நாட்டில் இருந்து இங்கு வந்தாலும், இங்க இருந்து முன்பு போனவர்கள்ஆக தான் இருப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.






