இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் “பராசக்தி”

சென்னை,
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருகிறதாக கூறப்படுகிறது.
படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, மதுரை, இலங்கை, பொள்ளாச்சியைத் தொடர்ந்து இறுதியாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாள்களில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என்றும் கூறப்படுவதால் ‘பராசக்தி’ திட்டமிட்டபடி திரைக்கு வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. பொங்கல் பண்டிகையில் ‘ஜனநாயகன்’ படத்துடன் ‘பராசக்தி’ மோத உள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.