'இரண்டு வானம்' படப்பிடிப்பு குறித்த அப்டேட் கொடுத்த விஷ்ணு விஷால்

சென்னை,
தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதைத்தொடர்ந்து இவர், குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் ஓ மாம்பழ சீசனில், ஆர்யன் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
தென் இந்திய திரையுலகில் மளமளவென முன்னேறி வரும் மமிதா பைஜு தற்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்கிறார். அதன்படி, ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ பட இயக்குனர் ராம் குமார் இயக்கும் புதிய படத்தில் மமிதா நடிக்கிறார். இப்படத்தில் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடிக்கிறார். இதன் மூலம் ராம் குமாருடன் 3-வது முறையாக விஷ்ணு விஷால் இணைந்திருக்கிறார்.
சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு “இரண்டு வானம்” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலானது. திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே கொடைக்கானல் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் இப்படம் குறித்த புதிய அப்டேட்டை கொடுத்திருக்கிறார். அதன்படி இரண்டு வானம் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். எனவே இனிவரும் நாட்களில் இப்படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.