விஜய்யின் கடைசி படத்தை இயக்க முடியாது என கூறிய இயக்குநர்.. காரணம் என்ன தெரியுமா

விஜய்யின் கடைசி படத்தை இயக்க முடியாது என கூறிய இயக்குநர்.. காரணம் என்ன தெரியுமா

விஜய்யின் கடைசி படம் 

தளபதி விஜய் தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார். இதனால் சினிமா வாழ்க்கையில் இருந்து வெளியேறப்போவதாகவும் அறிவித்துவிட்டார்.

தளபதி 69 தான் தன்னுடைய கடைசி படம் என அவர் கூறியுள்ள நிலையில், அப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்க கேவிஎன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் துவங்கிய நேரத்தில் இருந்தே, இது தெலுங்கில் வெளிவந்த பகவந் கேசரி படத்தின் ரீமேக் தான் என கூறப்பட்டது.

விஜய்யின் கடைசி படத்தை இயக்க முடியாது என கூறிய இயக்குநர்.. காரணம் என்ன தெரியுமா | Popular Director Refused To Do Vijay Last Movie

சமீபத்தில் பகவந் கேசரி படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியை, தளபதி 69ல் படமாகியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், விஜய்யின் கடைசி படம் ரீமேக்-ஆ இல்லையா என்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ரீமேக்-ஆ இல்லையா

நடிகர் விஜய், பகவந் கேசரி திரைப்படம் 5 முறை பார்த்தாராம். அதன்பின் அப்படத்தின் இயக்குநரான அனில் ரவிபுடி-யை அழைத்து தன்னுடைய கடைசி படமாக அனில் ரவிபுடி படத்தை ரீமேக் செய்து இயக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஆனால், ரீமேக் படத்தை இயக்க முடியாது என, விஜய்யின் கடைசி படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குநர் அனில் ரவிபுடி நிராகரித்துள்ளார். இதனை விடிவி கணேஷ் சமீபத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

விஜய்யின் கடைசி படத்தை இயக்க முடியாது என கூறிய இயக்குநர்.. காரணம் என்ன தெரியுமா | Popular Director Refused To Do Vijay Last Movie

இதன்பின் பேசிய இயக்குநர் அனில் ரவிபுடி, “விஜய் சாரின் கடைசி படம் பகவந் கேசரியின் ரீமேக் என்பதற்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவரவில்லை. அதை இந்த இடத்தில் பேசுவது என்பதும் சரியில்லை. விஜய் சார் மீது மிகப்பெரிய மரியாதை எனக்கு இருக்கிறது. அப்படத்தை இயக்கமுடியாமல் போனதற்கு நேரம் தான் காரணம். கடைசி படம் குறித்து பேசியது வேறு, அந்த நடந்தது வேறு, தளபதி 69க்கு என்னுடைய வாழ்த்துக்கள்.” என கூறினார். 

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *