வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்

அய்யனார் துணை
கடந்த வாரம் அய்யனார் துணை சீரியலில், குடும்பத்துடன் சேர்ந்து அனைவரும் பொங்கல் கொண்டாடினார்கள். அப்போது வீட்டிற்கு வந்த வானதி, பாண்டியனுக்கும் எனக்கும் திருமணம் செய்து வைக்க என்னுடைய வீட்டில் சரி என கூறிவிட்டார்கள் என்றார்.
இது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது. ஆனால், பாண்டியன் சேரன் அண்ணனுக்கு இன்னும் திருமணமாகவில்லை, அதற்குள் நாம் ஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி திருமணமானால் எங்கு தங்குவது, நமக்கென்று தனி ரூம் இல்லை என பாண்டியன் கூறினார்.
தயங்கும் பாண்டியன்
அதற்கு வானதி, நிலா – சோழன் திருமணம் Fake தானே, அதனால் உங்க அண்ணி தங்கியிருக்கும் ரூம்மை நாம் எடுத்துக்கொள்ளலாம், நிலாவை வீட்டிலிருந்து வெளியேறி ஏதாவது ஹாஸ்டலில் போய் தாங்கிக்க சொல்லிவிடு என கூறினார்.
இதை கேட்டவுடன் பாண்டியன் அதிர்ச்சியடைய, தற்போது வானதியை பெண் பார்க்க அவர்கள் வீட்டிற்கு கூட வர மறுக்கிறார்.
ஆம், வரும் வாரம் அய்யனார் துணை சீரியலில், சேரன் குடும்பத்தினர் அனைவரும் வானதியை சம்பிரதாயப்படி பெண் பார்க்க அவர் வீட்டிற்கு செல்லவுள்ளனர். ஆனால், சொன்ன நேரத்திற்கு அவர்கள் வரவில்லை.
இதனால் சேரனுக்கு வானதி போன் கால் செய்கிறார்.
பாண்டியன் இன்னும் வரவில்லை, வந்தவுடன் உடனடியாக உங்க வீட்டிற்கு தான் வருவோம் என சேரன் கூறுகிறார். பாண்டியன் – வானதி திருமணம் நடக்குமா இல்லை, வேறு எதுவும் பெரிய பிரச்சனை வெடிக்கப்போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






