ரூ. 50 கோடி சொத்து மதிப்புள்ள சீரியல் நடிகை.. யார் இவர் தெரியுமா?

சீரியல்
வெள்ளித்திரை பிரபலங்களுக்கு இணையாக சின்னத்திரை பிரபலங்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் தவறான திசையில் சென்றாலோ, அல்லது தாங்கள் எதிர்பார்த்ததை செய்யாமல் விட்டாலோ, கண்டிப்பாக உரிமையுடன் அதை ஏன் செய்யவில்லை என தற்போது சமூக வலைத்தளத்தில் எல்லாம் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
தமிழ் சீரியல்கள் மட்டுமின்றி மற்ற மொழிகளில் இருந்து தமிழில் டப்பிங் செய்யப்படும் சீரியல்களுக்கும் இங்கு ரசிகர் பட்டாளம் உண்டு. மகா பாரதம், இனிய இரு மலர்கள், என் கணவன் என் தோழன், உள்ளம் கொள்ளை போகுதடா போன்ற டப்பிங் சீரியல்கள் இன்று மாபெரும் வெற்றிபெற்றுள்ளன.
சாக்ஷி தன்வார்
அப்படி வெற்றிபெற்ற சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சாக்ஷி தன்வார். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான உள்ளம் கொள்ளை போகுதடா சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். சீரியல் மட்டுமின்றி உலகளவில் மாபெரும் வெற்றியடைந்த தங்கல் படத்திலும் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகை சாக்ஷி தன்வார் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. திரையுலகில் 27 வருடங்களாக பயணித்து வரும் நடிகை சாக்ஷியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 50 கோடி என தகவல் கூறப்படுகிறது.






