பிரித்தானியாவின் விசா கட்டுப்பாடுகளால் கவலைக்குள்ளாகியுள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகள்

பிரித்தானியாவின் விசா கட்டுப்பாடுகளால் கவலைக்குள்ளாகியுள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகள்

பிரித்தானிய உள்துறை அலுவலகத்தின் சில கட்டுப்பாடுகளால், ஆயிரக்கணக்கான குழந்தைகள், கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் தங்கள் பெற்றோரில் ஒருவரை பிரிந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் விசா கட்டுப்பாடுகள்

ஒரு பிரித்தானியக் குடிமகன்/குடிமகள் அல்லது பிரித்தானியாவில் நிரந்தரக் குடியுரிமை பெற்ற நபர், பிரித்தானியரல்லாத தனது கணவர் அல்லது மனைவியை தன்னுடன் வாழ பிரித்தானியாவுக்கு அழைத்துவர விசா பெறவேண்டுமானால், அவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு வருவாய் இருக்கவேண்டும் என விதி உள்ளது.

பிரித்தானியாவின் விசா கட்டுப்பாடுகளால் கவலைக்குள்ளாகியுள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகள் | Children Are Hidden Victims Of Immigration Rules

பிரித்தானியாவில் ஆட்சி செய்த முந்தைய கன்சர்வேட்டிவ் அரசு, அந்த தொகையை, 2025ஆம் ஆண்டின் இளவேனிற்காலத்தில், 18,600 பவுண்டுகளிலிருந்து 38,700 பவுண்டுகளாக உயர்த்த திட்டமிட்டிருந்தது.

இப்போதைக்கு அந்த தொகை 29,000 பவுண்டுகளாக உள்ளது.

ஆக, அந்த அளவுக்கு வருவாய் இல்லாதவர்கள் தங்கள் கணவர் அல்லது மனைவியை பிரித்தானியாவுக்கு அழைத்துவர இயலாது.

இதனால், பிரித்தானியர்களின் பிரித்தானியர்களல்லாத கணவர் அல்லது மனைவி, தங்கள் துணையை சந்திக்க முடியாத நிலை காணப்படுகிறது.

பிரித்தானியாவின் விசா கட்டுப்பாடுகளால் கவலைக்குள்ளாகியுள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகள் | Children Are Hidden Victims Of Immigration Rules

குறிப்பாக, பிள்ளைகள், பிரித்தானியாவில் வாழும் தங்கள் பெற்றோருடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை செலவிடமுடியாத நிலை காணப்படுகிறது.

அல்லது, வேறு வகையில் கூறினால், தாய் அல்லது தந்தை ஓரிடமும், தாங்கள் யாராவது ஒரு பெற்றோருடன் மட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் நிலையில் ஆயிரக்கணக்கான பிள்ளைகள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *