டிரெண்ட் செட்டராக மாறப்போகும் அஜித்.. ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்

டிரெண்ட் செட்டராக மாறப்போகும் அஜித்.. ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்

அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி விடாமுயற்சி படம் வெளிவரவுள்ளது. இதை தொடர்ந்து குட் பேட் அக்லி திரைப்படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வரும் அஜித் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ரேஸில் பங்கேற்று மூன்றாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்றார்.

டிரெண்ட் செட்டராக மாறப்போகும் அஜித்.. ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் | Happy News For Ajith Fans

ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அதிகாலை வெளிவரும் காட்சிகள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெரும்.

ஆனால் சில ஆண்டுகளாக அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை. இதனால் படத்தின் வசூல் கணிசமாக குறைந்தது.

ஹேப்பி நியூஸ்

இந்நிலையில், தற்போது கோலிவுட்டில் புதிதாக ஒரு டிரெண்ட் உருவாக உள்ளது. அது என்னவென்றால் நாளை படம் ரிலீஸ் ஆகிறது என்றால் அதன் ப்ரீமியர் காட்சியை முந்தைய நாள் இரவே திரையிட திட்டமிட்டு உள்ளனர்.

டிரெண்ட் செட்டராக மாறப்போகும் அஜித்.. ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் | Happy News For Ajith Fans

இந்த நடைமுறை வரும் ஏப்ரல் மாதம் முதல் பின்பற்றப்பட உள்ளதாம். ஏப்ரல் மாதம் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் ப்ரீமியர் ஷோவை வரும் ஏப்ரல் 9ந் தேதி இரவு திரையிட திட்டமிட்டுள்ளார்கள்.  

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *