சூர்யாவை காதலிக்க ஆசை, சென்சேஷனல் நடிகை ருக்மிணி ஓபன் டாக்
ருக்மிணி வசந்த்
ருக்மிணி வசந்த் இந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்ற இடத்திற்கு வந்துவிட்டார். இவர் நடிப்பில் வெளியான காந்தாரா சாப்டர் ஒன் படம் இவரை இந்தியளவில் புகழ் பெற செய்தது.
இந்நிலையில் ருக்மிணி தற்போது பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வருகிறார். அதில் ஜுனியர் என் டி ஆர் படமும் ஒன்று, இவர் நடிப்பில் அடுத்த வாரம் டாக்சிக் படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஓபன் டாக்
இந்த நிலையில், நடிகை ருக்மிணி வசந்தின் பழைய பேட்டி ஒன்று வைரல் ஆகி வருகிறது.
அதில் ருக்மிணியிடம் உங்களுக்கு எந்த மாதிரி படத்தில் நடிக்க ஆசை என கேட்க, அதற்கு அவர், முழுக்க காதல் படம் ஒன்றில் நடிக்க ஆசை என சொல்ல, உடனே எந்த ஹீரோவுடன் என கேட்க, சில நொடி யோசித்து சூர்யா சார் என பதில் அளித்துள்ளார்.




