எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு… எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது.
குணசேகரன், ஈஸ்வரியை தாக்கிய விவகாரம் தான் இப்போது கதையின் ஹைலைட்டான கதையாக ஓடுகிறது. ஜனனி இந்த வழக்கில் கைதாகி பின் வெளியே வந்தார். வந்தவர் குணசேகரனுடன் போட்போட செம பிளானுடன் இறங்கிவிட்டார்.
கதையில் அடுத்து என்ன அடுத்து என்ன என்ற பரபரப்பிலேயே மக்களை புலம்ப வைக்கிறார் இயக்குனர்.
புரொமோ
இன்றைய எபிசோடிற்கான புரொமோவில் ஒரு பரபரப்பான விஷயம் நடந்துள்ளது.
அதாவது வீட்டிற்கு வந்த ஞானத்திடம் பாசமாக பேசுகிறார் குணசேகரன். பின் ஈஸ்வரி வழக்கில் புதிய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார், அவர் வீட்டிற்கு வந்ததுமே தான் யார் என கூறி திகில் காட்டுகிறார்.
ஜனனியிடம் ஜீவானந்தம் குறித்து கேட்டு குழப்புகிறார்.
இதோ புரொமோ, யார் அந்த அதிகாரி பாருங்க,






