அஞ்சு வண்ணப் பூவே, சரிகமப மேடையில் மறைந்த கணவர் பற்றி கதறி அழுத பவித்ரா… எமோஷ்னலான அரங்கம்

சரிகமப சீசன் 5
ஜீ தமிழ், தமிழ் சினிமா ரசிகர்கள் முக்கியமாக பார்க்கும் தொலைக்காட்சிகளில் ஒன்றாக உள்ளது சரிகமப பாடல் நிகழ்ச்சி.
தற்போது 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, வாரந்தோறும் புதிய புதிய சுற்றுகளுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த வாரம் Dedication Round, இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் அருமையாக பாடி வருகிறார்கள்.
புரொமோ
தற்போது சரிகமப சீசன் 5ன் இந்த வாரத்திற்கான எபிசோட் புரொமோ வெளியாகியுள்ளது.
அதில், போட்டியாளர் பவித்ரா, அஞ்சு வண்ணப் பூவே என்ற பாடலை தனது கணவனுக்காக பாடியுள்ளார். இறந்த தனது கணவனை நினைத்து பாடியுள்ளார், இந்த மேடையில் பவித்ரா பாட வேண்டும் என ஆசைப்பட்டதே அவரது கணவர் தானாம்.
அழகான குருவி கூடு போல நாங்கள் சந்தோஷமாக இருந்தோம், எனக்கு அவர் வேண்டும் என கதறி அழுது கூற அரங்கமே கண்ணீரில் மூழ்கிவிட்டது.
இதோ புரொமோ,