வீட்டைவிட்டு வெளியேறுவது குறித்து நிலா சொன்ன பதில், சேரன், சோழன் செய்தது என்ன?… அய்யனார் துணை சீரியல்

அய்யனார் துணை
கடந்த சில வாரங்களாக பிரச்சனையில் இருந்த அய்யனார் துணை கதைக்களம் இப்போது கொண்டாட்டமாக மாறியுள்ளது.
அதாவது அய்யனார் துணை சீரியலில் சேரன்-சந்தா திருமண ஏற்பாடு தொடங்கப்பட்டுள்ளது. சோழன் தனக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி சேரன் திருமணத்திற்கு பணம் கொடுக்கிறார்.
அதேபோல் பாண்டியும் தன்னால் முடிந்த பணத்தை கொடுக்கிறேன் என்றார். நடேசன் சந்தாவிற்கு தாலி மட்டும் நீங்கள் வாங்குங்கள், சேரன் அம்மா செயின் என்னிடம் உள்ளது அதை தருகிறேன் என்கிறார்.
பரபரப்பாக சேரன்-சந்தா திருமண வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
புரொமோ
தற்போது புதியதாக அய்யனார் துணை சீரியலின் புரொமோ வெளியானது. அதில் திருமண நாளை நெருங்கிய நிலையில் சேரன் சோகமாக இருக்கிறார். என்ன ஆனது என நிலா கேட்க எனக்கு திருமணம் நடந்தால் நீ வீட்டைவிட்டு சென்றுவிடுவாயா என கேட்கிறார்.
அதற்கு நிலா, அப்படியெல்லாம் நான் போக மாட்டான், என்ன நடந்தாலும் நான் இங்கே தான் இருப்பேன். உங்களை விட்டுட்டு, இந்த வீட்டை விட்டுட்டு, சோழனை விட்டுட்டு போக வேண்டும் என நினைத்தது இல்லை.
இப்போது இந்த வீட்டில் நானும் ஒரு நபராகிட்டேன், வீட்டைவிட்டு போக வேண்டும் என யோசிக்க மாட்டேன் என்கிறார். இதைக்கேட்ட சேரன் மிகவும் சந்தோஷப்பட சோழனும் தூரத்தில் இருந்து இதை கேட்டு சந்தோஷப்படுகிறார்.






