வீட்டிற்கு வந்து சீதா சொன்ன விஷயம், முத்து, மீனாவை கைது செய்த போலீஸ்… சிறகடிக்க ஆசை சீரியல்

சிறகடிக்க ஆசை
நேற்றைய சிறகடிக்க ஆசை சீரியலில், முத்து புதியதாக வாங்கியுள்ள வேனின் பூஜை போடப்பட்டது.
அப்போது கோவிலில் சீதாவின் தாலி திருடு போக அதை அண்ணாமலை வீட்டிற்கு வந்த ஜோசியக்கார பெண் தான் என்பதை அறிந்துகொள்கிறார்கள்.
தாலி இல்லாமல் வீட்டிற்கு சென்ற சீதாவை அருண் அடித்து வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார். கடைசியாக முத்து-மீனா இருவரும் அந்த திருட்டி பொம்பளையை பிடிக்க ஒரு பிளான் போட்டார்கள்.
எபிசோட்
இன்றைய எபிசோடில், அருண் அடித்து அனுப்பியதால் தனது அம்மா வீட்டிற்கு வந்து நடந்ததை கூறுகிறார் சீதா.
தாலி இல்லாமல் அருண் வீட்டிற்கு வரக்கூடாது என்று கூறியதை சீதாவின் அம்மா மீனாவிற்கு போன் செய்து கூறுகிறார், அதைக்கேட்ட முத்து செம கோபப்படுகிறார். அந்த நேரம் மீனா முதலில் தாலியை கண்டுபிடிப்போம் என்கிறார்.
முத்து-மீனா தங்களது லுக்கை மாற்றி நகையை உருக்கும் கும்பலின் வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு எதிர்ப்பாரா விதமாக போலீஸ் வர அந்த தங்கம் உருக்கும் கும்பலுடன் முத்து-மீனாவும் கைதாகிறார்கள்.
போலீஸ் நிலையத்தில் முத்து-மீனா இருவரும் நாங்கள் திருட்டு கும்பல் இல்லை, என் மனைவியின் தங்கை செயினை திருடிவிட்டார்கள், அதை திரும்ப எப்படியாவது பெறவே அங்கு சென்றோம் என்கிறார்கள்.
ஆனால் போலீஸ் அதை நம்பவே இல்லை, பின் முத்து தனது அப்பாவிற்கு போன் செய்யுங்கள், நாங்கள் நல்ல குடும்பம் என போலீசாரிடம் கெஞ்சுகிறார்.
போலீஸும் அண்ணாமலைக்கு போன் செய்து ஸ்டேஷன் வர சொல்கிறார்கள்.
அவர் வருவதற்குள் ரவி-ஸ்ருதி போலீஸ் நிலையம் வந்து தங்களது அடையாளத்தை கூறுகிறார்கள், முத்து-மீனா திருடர்கள் இல்லை என்கிறார்.
அடுத்து என்ன நடக்குமோ பொறுத்திருந்து பார்ப்போம்.






