விஜய் திரிஷா கிட்ட இருந்து வெளியே வரணும்.. சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்
பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. வழக்கு திரும்ப பெறப்பட்டு மீண்டும் சென்சார் போர்டுக்கு படம் அனுப்பப்பட்டு இருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க விஜய் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார். இன்று சேலத்தில் அவரது பிரச்சார கூட்டம் நடந்தது. அதில் அவர் திமுக, அதிமுக, பாஜக என எல்லோரையும் தாக்கி பேசி இருக்கிறார்.
‘எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவை எடப்பாடி வைத்திருக்கிறார், அண்ணா தொடங்கிய திமுகவை ஸ்டாலின் வைத்திருக்கிறார். என்னை போல புது கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்க முடியுமா’ என விஜய் பேசி இருக்கிறார்.
திரிஷா கிட்ட இருந்து..
இந்நிலையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியார்களிடம் பேசும்போது விஜய் விமர்சனத்திற்கு என்ன சொல்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “பாவம் அவர் அனுபவம் இல்லாதவர். வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷா கிட்ட இருந்து முதலில் வெளியே வந்தால் தான் எல்லாமே நடக்கும்” என சர்ச்சையாக பேசி இருக்கிறார்.






