முத்துவிடம் ரோஹினி பற்றிய முழு உண்மையை கூறிய PA தினேஷ்… சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் தொடர் ஆரம்பித்த நாள் முதல் டிஆர்பியில் டாப்பில் இருந்து வரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.
இப்போது கதையில் ரோஹினி பற்றிய உண்மை தெரிந்து அவரை விவாகரத்து செய்தே ஆக வேண்டும் என விஜயா இருக்கிறார். எப்படியும் விவாகரத்து ஆகிவிடும் என மனோஜிற்கு பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
இதற்கு இடையில் ஒரு புது பிரச்சனை தொடங்கியுள்ளது. அதாவது ரவி பெயரில் நீது புதிய பூ கடை திறந்துள்ளார், அதற்கு சிந்தாமணி தான் பூ சப்ளை தான் செய்துள்ளார். இதனை விஜயாவிடம் கூறி சிந்தாமணி உதவுவதை நிறுத்த வைக்கனும் என ரவி மற்றும் ஸ்ருதி முடிவு செய்துள்ளார்கள்.
புரொமோ
தற்போது இந்த வாரத்திற்கான சிறகடிக்க ஆசை சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது.
அதில் வழக்கம் போல் தினேஷ் ரோஹினியை எல்லா உண்மையும் கூறிவிடுவேன் என பணம் கேட்டு மிரட்டுகிறார். ரோஹினி வழக்கம் போல் நடிக்கிறார், என்னிடம் பணம் இல்லை ஆனால் முத்துவிடம் மட்டும் உண்மையை கூறாதே என்கிறார்.
பணம் தர மாட்டாய் சரி உடனே நான் முத்துவிடம் கூறுகிறேன் என கிளம்புகிறார்.
அவர் முத்துவிடம் கல்யாணி பற்றி கூற அவர் நன்கு கவனிக்கிறார். இதோ புதிய புரொமோ,






