மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லையே: கமல் கடிதம் பார்த்து நீதிமன்றம் கேள்வி

மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லையே: கமல் கடிதம் பார்த்து நீதிமன்றம் கேள்வி


தக் லைப் படத்தினை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை போட்டிருக்கும் தடையை எதிர்த்து கமல் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

கமல் மன்னிப்பு கேட்டால் தான் படத்தை ரிலீஸ் செய்ய விடுவோம் என போராட்டக்காரர்கள் கூறிய நிலையில், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியும் அதே கண்டிஷனை போட்டிருக்கிறார்.

மன்னிப்பு கேட்க 2.30 மணி வரை கமலுக்கு அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், அவர் இரண்டு பக்க கடிதத்தை அனுப்பி இருக்கிறார். தான் சொன்னது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது, கன்னட மொழியை தான் மதிப்பதாக கமல் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லையே 

இந்நிலையில் அந்த கடிதத்தை பார்த்த நீதிபதி ‘விளக்கம் எல்லாம் சரி, ஆனால் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லையே’ என கேட்டிருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக கமல் தரப்பு தற்போது நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது.
 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *