மனைவியை மேடையில் புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன்.. வரவு செலவு எல்லாமே அவர் தான் பார்க்கிறார்


நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்த தாய்க்கிழவி படம் 50 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றது. அதில் மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் “நான் தயாரித்த கனா, தாய்க்கிழவி போன்ற படங்களுக்கு வெற்றி கிடைக்கும் போது நிறைவு கிடைக்கிறது” என கூறினார்.

மனைவியை மேடையில் புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன்.. வரவு செலவு எல்லாமே அவர் தான் பார்க்கிறார் | Sivakarthikeyan Praises Wife Aarthi Managing Money

ஆர்த்தியை புகழ்ந்த சிவகார்த்திகேயன்

“எனக்கு திருமணம் ஆன நாளில் இருந்து ஆர்த்தி தான் வரவு செலவு கணக்குகளை பார்க்கிறார். என் வங்கி கணக்கில் எவ்ளோ பணம் இருக்கு என எனக்கு தெரியாது. செலவுக்கு பணம் வேண்டும் என்றால் ஆர்த்தியிடம் தான் கேட்டு வாங்குவேன். அதை பெருமையாக நினைக்கிறேன்.”

“அவர் பார்த்துக்கொள்ளவில்லை என்றால் என்னால் ப்ரொடக்ஷன் எல்லாம் பண்ணியிருக்க முடியாது” என சிவகார்த்திகேயன் மேடையில் உருக்கமாக பேசினார். 

மனைவியை மேடையில் புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன்.. வரவு செலவு எல்லாமே அவர் தான் பார்க்கிறார் | Sivakarthikeyan Praises Wife Aarthi Managing Money


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *