போலீசாரால் கைது செய்யப்பட்ட சோழன், நிலாவுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்… அய்யனார் துணை சீரியல்

அய்யனார் துணை
இந்த சீரியல் மட்டும் தான் எந்த பிரச்சனையாக இருந்தாலும் உடனடியாக தீர்வு காட்டி விடுகிறார்கள் என அய்யனார் துணை ரசிகர்கள் பெருமையாக பேசி வந்தார்கள்.
அதற்கு ஏற்றார் போல் கதையிலும் இப்போது அடுத்தடுத்து பிரச்சனை வர உடனடியாக தீர்வு காணப்பட்டும் வருகிறது. நேற்றைய எபிசோடில், நிலா பணம் கொடுக்காமல் வேலையில் இருப்பது அசிங்கமாக இருக்கிறது என சோழனிடம் கதறி அழுதார்.
அதனை தாங்க முடியாத சோழன் தான் வேலை செய்யும் ஓனரின் பணத்தை திருடி வந்து நிலாவிடம் கொடுத்து பணத்தை கொடுக்க கூறினார். அவரும் பணம் கிடைத்தது நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டார்.
எபிசோட்
இன்றைய எபிசோடில், சோழனை தேடி அவரது ஓனர் வீட்டிற்கு வருகிறார். சோழனிடம் காணாமல் போன பணம் குறித்து அவர் கேட்கிறார், நீ எடுத்தியா என்கிறார். ஆனால் சோழன் நான் எடுக்கவில்லை என கூறிவிடுகிறார்.
பின் அடுத்த நாள் காலையில் சோழன் அலுவலகம் சென்று தனது ஒனரை சந்திக்கிறார். ஆனால் அங்கு சோழனோ பணம் எடுத்த விஷயம் தெரியவர அவர் போலீசில் புகார் அளித்துவிடுகிறார்.
போலீசார் பணம் திருடிய சோழனை கைது செய்துவிடுகிறார்கள், அவர் தனது ஓனரிடம் மன்னித்துவிடுங்கள் என கெஞ்சுகிறார். சோழன் ஓனர் சேரனுக்கு போன் செய்து இந்த விஷயத்தை கூற நிலா-சேரன் இருவரும் ஷாக் ஆகிறார்கள்.
அடுத்து என்ன நடக்கும் என்பதை நாளைய எபிசோடில் காண்போம்.






