பின்னணி பாடகி சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.. 20,000 பாடல்கள் பாடியவருக்கு இப்படியொரு நிலைமையா

சுஜாதா மோகன்
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் 20,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருப்பவர் சுஜாதா மோகன். இவர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பாடி வருகிறார். தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான பின்னணி பாடகியாக திகழ்கிறார்.
சுஜாதா இசையமைப்பாளர் மோகனை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் மகள் ஸ்வேதா மோகனும் தற்போது பின்னணி பாடகியாக உள்ளார். அம்மாவை போலவே மகளும் பின்னணி பாடகியாக இசை உலகில் தனி இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியொரு நிலைமையா
பின்னணி பாடகி சுஜாதா மோகன் சமீபத்தில் நடைபெற்ற ஒரு தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில், சுஜாதா மோகனுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. அந்த விருதை பெற மேடைக்கு வந்த சுஜாதா பகிர்ந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
“கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் எந்த மேடையிலும் பாடவில்லை” என்று கூறிய அவர், “எனக்கு தொண்டையில் ஒரு பிரச்சனை இருக்கிறது. அதனால், என்னால் முன்பை போல் பாட முடியவில்லை” என்றார். சுஜாதா இப்படி கூறியது ரசிகர்களை நெகிழ வைத்துவிட்டது.






