பா.ரஞ்சித் படப்பிடிப்பில் Stunt Master-க்கு நேர்ந்த சோகம்

பா.ரஞ்சித்
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் முக்கியமாக பார்க்கும் இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித்.
இவர் இப்போது வேட்டுவம் என்ற படத்தை இயக்கி வருகிறார், நாகையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்துள்ளது.
அப்போது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் காரில் இருந்து குதித்தபோது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் படக்குழுவினரை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.






