நடிகை கடத்தல் வழக்கு.. நடிகர் திலீப் வழக்கில் வரப்போகும் தீர்ப்பு

நடிகை கடத்தல் வழக்கு.. நடிகர் திலீப் வழக்கில் வரப்போகும் தீர்ப்பு


பிரபல நடிகை ஒருவரை காரில் கடத்தி சென்று வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். அதன் பின் ஜாமினில் வெளிவந்தார்.

அந்த வழக்கின் விசாரணை ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க திலீப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் அவர் நடிப்பில் Prince and Family என்ற படம் ரிலீஸ் ஆகி இருந்தது.

தீர்ப்பு

நடிகை கடத்தல் மற்றும் வன்கொடுமை வழக்கில் விசாரணை நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

நடிகை உடன் இருக்கும் பகையில் திலீப் இந்த குற்றத்தை ஆள் வைத்து செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு இருக்கும் நிலையில், அவர் வழக்கில் 8வது குற்றவாளியாக இருக்கிறார்.

இந்த வழக்கின் தீர்ப்பு வரும் டிசம்பர் 8ம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. நடிகர் திலீப் எதிர்காலம் என்ன என்பது அன்றைய தேதியில் நீதிமன்றத்தால் எழுதப்பட இருக்கிறது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *