நடிகைகளை தவறான angleல் வீடியோ எடுக்கிறார்கள்.. ருக்மிணி வசந்த் கடும் கோபமான பதிவு

ருக்மிணி வசந்த் தற்போது தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வளர்ந்து வருகிறார். அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் கிடைத்து வருகிறார்கள்.
இந்நிலையில் ருக்மிணி வசந்த் கடும் கோபமாக போட்டிருக்கும் ஒரு பதிவு வைரல் ஆகி இருக்கிறது.
தவறான ஆங்கிளில்..
நடிகைகள் வெளியில் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பலபேர் அவர்களை தவறான ஆங்கிளில் அங்கங்களை ஜூம் செய்து வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
அது பற்றி தான் ருக்மிணி வசந்த் காட்டமாக பேசி இருக்கிறார். நாங்கள் கலைக்காக தான் இங்கே இருக்கிறார். இப்படி செய்வது கண்ணியத்தை பாதிக்கும் செயல் என ருக்மிணி கண்டனம் தெரிவித்துள்ளார்.






