த்ரிஷா மற்றும் விஜய் குறித்து ஓபனாக பேசிய நடிகை குஷ்பு… என்ன கூறியுள்ளார் பாருங்க

த்ரிஷா-விஜய்
தமிழ் சினிமாவில் கடந்த சில வாரங்களாக ஒரு விஷயம் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.
அரசியல் களத்தில் விஜய் தனது முழு கவனத்தை செலுத்தி வரும் நிலையில் அவரது சொந்த வாழ்க்கை பற்றி எல்லோரும் பேச ஆரம்பித்துவிட்டனர். விஜய்யின் மனைவி சங்கீதா, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றுள்ளார்.
அதில் விஜய் மீது அவர் நிறைய குற்றச்சாட்டு கூறியிருந்தார், அதையெல்லாம் கேட்டு விஜய் ரசிகர்களே மிகவும் வருத்தப்பட்டார்கள். ஆனால் விஜய்யோ ஒரு பேட்டியில் சில விஷயங்கள் கேள்விப்பட்டு நீங்கள் வருத்தப்படுகிறீர்கள், அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறியிருந்தார்.
நடிகை குஷ்பு
அண்மையில் ஒரு ஆங்கில ஊடகம் ஒன்றில் குஷ்புவிடம், விஜய்-த்ரிஷா விமர்சனங்கள் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர், நாம் இருக்கும் காலத்தில் யாராவது ஒரு சின்ன விஷயம் செய்தால் கூட அதை வேறு விஷயத்துக்கு குற்றம் சாட்டி பேசுவதற்கு என்றே சிலர் இருக்கிறார்கள். விஜய், த்ரிஷா எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.
நான் சந்தித்தவர்களில் அவர் மிகவும் மரியாதையான பெண், மிகவும் மென்மையான மனம் கொண்டவர். சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்து பேசுபவர்களுக்கு த்ரிஷா பதில் கூற வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளார்.






