திருமணத்தை நிறுத்த சொல்லும் கயல், எழில் அதிர்ச்சி முடிவு! சன் டிவி கயல் அடுத்த வார ப்ரோமோ

சன் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருக்கும் கயல் தொடரில் ஆனந்தியின் திருமண பிரச்சனை தான் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
ஆனந்தி பாலுவை காதலிக்கும் விஷயம் பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. அந்த பாலுவை எப்படி தான் காதலித்தாய் என கேட்டு எழில் கடும் கோபமாக பேசுகிறார்.
அதிர்ச்சி முடிவு
அப்போது அங்கு வரும் மீனாட்சி அம்மா கடும் கோபமாக பேசுகிறார். திருமணத்தை நிறுத்தும்படி கயல் கெஞ்சுகிறார். ஆனால் ஆனந்தி காதலை மறந்துவிட்டு என் மகனை திருமணம் செய்துகொள்ள சொல் என கூறுகிறார் மீனாட்சி அம்மா.
மேலும் கயல் பாலுவுக்கும் ஆனந்திக்கும் திருமணம் செய்துவைப்பேன் என கூறினால், இனி உனக்கும் எனக்கும் எந்த ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என கோபமாக கூறுகிறார் எழில். தற்போது என்ன செய்வார் கயல்? ப்ரோமோ பாருங்க.






