ஜனனி கேட்ட ஒரு கேள்வியால் அதிர்ந்த ஈஸ்வரி.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய எபிசோடு ப்ரோமோ
சன் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.
ஈஸ்வரி கோமாவில் இருந்து மீண்டு வந்தாலும் அவர் பழைய நினைவுகளை மறந்துவிட்டதால், என்ன செய்வது ஏன் தெரியாமல் ஜனனி விழித்துக்கொண்டிருக்கிறார்.
அவர் தான் மறந்துவிட்டார் என்றால், நாம் தான் எதாவது செய்யவேண்டும் என மற்ற பெண்களிடம் ஜனனி கூறுகிறார்.
ஈஸ்வரி ரியாக்ஷன்
ஈஸ்வரி நினைவுகளை மறந்துவிட்டதாக சொல்லி வரும் நிலையில், சின்ன சின்ன விஷயங்கள் கூட உங்களுக்கு நினைவில்லையா என ஜனனி கேட்கிறார்.
மேலும் ஜீவானந்தம் சார் நியாபகம் இருக்காரா அல்லது மறந்துவிட்டதா என கேட்க ஈஸ்வரி ஷாக் ரியாக்ஷன் கொடுக்கிறார். ப்ரோமோவை பாருங்க.






