சர்ச்சைக்கு நடுவில் த்ரிஷா போட்ட முதல் பதிவு.. என்ன கூறியுள்ளார் பாருங்க

நடிகை த்ரிஷா மற்றும் விஜய் ஜோடியாக ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா தொடர்ந்திருக்கும் விவாகரத்து வழக்கில், விஜய்க்கு ஒரு நடிகை உடன் கள்ள தொடர்பு இருக்கிறது என குற்றம்சாட்டி இருந்தார். அவர் உடன் வெளிநாட்டுக்கு செல்வது, நிகழ்ச்சிக்கு செல்வது என வெளியில் செல்லும்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது குடும்பத்திற்கு பெரிய அவமானத்தை ஏற்படுத்தியது என சங்கீதா குறிப்பிட்டு இருந்தார்.
தற்போது விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் மேட்சிங் உடையில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றது சங்கீதா அளித்த புகாரை நிரூபிப்பது போல இருப்பதாக நெட்டிசன்கள் கடுமையாக தாக்கி பதிவிட்டு வருகின்றனர்.
த்ரிஷா பதிவு
இந்நிலையில் த்ரிஷா சர்ச்சைக்கு நடுவில் ஒரு பதிவை இன்ஸ்டாவில் போட்டிருக்கிறார். நேற்று எடுத்த போட்டோக்களை வெளியிட்டு “Thank you for always being my go-to people♥️” என குறிப்பிட்டு தன்னை ஆதரிப்பவர்களுக்கு நன்றி கூறி உள்ளார்.
வைரலாகும் பதிவு இதோ.






