குணசேகரன் குறித்து அறிவுக்கரசி சொன்ன நிஜ உண்மை, நந்தினி அதிரடி… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவி ரசிகர்கள் காலை 10 மணி தொடங்கி இரவு 10 மணி வரை தொடர்ந்து சீரியல்களாக பார்த்து வருகிறார்கள்.
விதவிதமான கதைக்களம் கொண்ட தொடர்களாக ஒளிபரப்பாகிறது, அதிலும் முக்கியமாக பெண்களை மையப்படுத்திய கதைகள் தான் அதிகம் ஒளிபரப்பாகிறது.
அப்படி பெண்கள் முன்னேற்றம், பெண்களின் எழுச்சி போன்றவற்றை எடுத்துரைக்கும் வகையில் எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற சீரியல் ஒளிபரப்பாகிறது. கதையில் ஆணாதிக்க எண்ணம் கொண்ட குணசேகரன் என்பவரின் வீட்டிப் பெண்களின் போராட்ட கதையாக அமைந்துள்ளது.
புரொமோ
இப்போது கதையில் ஈஸ்வரி குணமாகி வீட்டிற்கு வருகிறார் என்ற செய்தி வந்ததும் குடும்பமே சந்தோஷமாக உள்ளனர். ஆனால் அவரது மருத்துவ செலவுக்கு ரூ. 50 லட்சம் கட்ட வேண்டும் என்பதால் பெண்கள் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இடையில் குணசேகரன் தனது மனைவிக்கு நானே பணம் கட்டுகிறேன் என கூற தர்ஷினி வேண்டாம் என தடுக்கிறார்.
இன்றைய எபிசோட் புரொமோவில், அறிவுக்கரசி குணசேகரன் என்ன தான் பிளான் செய்கிறார் என புலம்புகிறார். பின் அவர் என்ன பிளான் போட்டாலும் அவரை தாண்டி வேறு யாருக்கும் நல்லது நினைக்க மாட்டார் என குணசேகரனை பற்றி தெளிவாக கூறுகிறார்.
பின் குணசேகரன் என்னிடம் எதுவும் கேட்காதீர்கள், உங்கள் மனைவியிடம் கேளுங்கள் என்கிறார். உடனே கதிர் அவளிடம் என்ன கேட்பது என கூற நந்தினி நான் பேச வேண்டும் என்கிறார். அப்படி என்ன விஷயத்தை பற்றி பேசப்போகிறார்கள் என்பதை இன்று காண்போம்.






