கருப்பு ஏப்ரல் 10 ரிலீஸ் இல்லை.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த RJ பாலாஜி

கருப்பு ஏப்ரல் 10 ரிலீஸ் இல்லை.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த RJ பாலாஜி


சூர்யா மற்றும் RJ பாலாஜி கூட்டணியில் கருப்பு படம் தொடங்கி நீண்ட காலம் ஆகிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்தாலும் இன்னும் ரிலீஸ் எப்போது என்பது பெரிய கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

இந்நிலையில் பல வதந்திகளும் தற்போது வலம் வர தொடங்கி இருக்கிறது. தயாரிப்பாளருக்கும் RJ பாலாஜிக்கு சண்டை, இசையமைப்பாளர் விலகிவிட்டார், இயக்குனர் வழக்கு போட போகிறார் என்றெல்லாம் வதந்திகள் பரவி வருகிறது.

கருப்பு ஏப்ரல் 10 ரிலீஸ் இல்லை.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த RJ பாலாஜி | Karuppu Not Releasing On April 10 Rj Balaji

RJ பாலாஜி விளக்கம்

இந்நிலையில் RJ பாலாஜி அனைத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசி இருக்கிறார்.

கருப்பு படம் ஏப்ரல் 10 ரிலீஸ் என்ற செய்தி உண்மை இல்லை. இப்போது படத்தின் பணிகளை மீண்டும் தொடங்கி இருக்கிறோம். இன்னும் 10 நாட்களில் ரிலீஸ் தேதி உடன் அப்டேட் வரும்.

தயாரிப்பாளருடன் எனக்கு சண்டை போன்ற செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். அவர் பேசிய வீடியோ இதோ. 




admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *