கடைசிவரை ஒரேஒரு விஷயத்திற்காக மன கஷ்டத்தில் இருந்த நடிகர் விவேக்… அவரது மனைவி பேட்டி

விவேக்
விவேக், தமிழ் சினிமா என்றும் மறக்க முடியாத ஒரு சிறந்த நடிகர்.
எல்லோரும் போல படங்களில் கமிட்டானோம் மற்றவர்களை கிண்டல் செய்வது போல அடிவாங்குவது போல நடித்துவிட்டு செல்லாமல் கருத்துள்ள காமெடி காட்சிகள் நடித்து மக்களுக்கு விழப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.
கடைசியாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு விழப்புணர்வு ஏற்படுத்தினார்.
மனைவி பேட்டி
விவேக் அவர்களின் மறைவிற்கு பிறகு அவரது மனைவி மட்டும் தனது கணவர் குறித்து பேட்டி கொடுத்தார். அதில் அவர் பேசும்போது, நடிகர் விவேக்கிற்கு இறக்கும் வரை ஒரு மனக்கஷ்டம் இருந்தது.
மகன் இருந்த சோகத்தை அவர் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் எனக்கு தெரியும் ஒரு தகப்பனுக்கு ஒரு புத்திர சோகம் கடைசி வரை மனதில் இருக்கும்.
அவர் நகைச்சுவை நடிகராக இருந்ததால் அவர் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை, ஆனால் கடைசி வரை மகன் இறந்த சோகம் அவருக்கு இருந்தது என கூறியுள்ளார்.






