எப்போதும் அவர் மட்டும்தான் சூப்பர் ஸ்டார்.. நடிகர் சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். கடைசியாக இவர் நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியாகி படம் செம வசூல் வேட்டை நடத்திய படமாக உள்ளது.
அதை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படம் இரண்டு நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது.
ஓபன் டாக்!
இந்நிலையில், மதராஸி பார்த்து முடித்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து சிவகார்த்திகேயன் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ” மக்கள் படத்தில் எந்த காட்சிகள் பார்த்து ரசிக்கின்றனர் என்பதை பார்க்க தான் நான் இங்கு வந்தேன். எப்போதுமே சூப்பர் ஸ்டார் ரஜினி சார் மட்டுமே” என்று தெரிவித்துள்ளார்.