இந்தி, தமிழ், தெலுங்கு என்று பார்க்கமாட்டேன்.. நடிகை ராஷ்மிகா மந்தனா பேச்சு

இந்தி, தமிழ், தெலுங்கு என்று பார்க்கமாட்டேன்.. நடிகை ராஷ்மிகா மந்தனா பேச்சு


குபேரா 

நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, நேற்று குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய வைரலாகி வருகிறது.

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள திரைப்படம் குபேரா. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, நேற்று பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

ராஷ்மிகா பேச்சு

இதில் மேடையேறி பேசிய நடிகை ராஷ்மிகா “இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி என்கிற பேதம் பார்த்து நான் படங்களில் நடிப்பது இல்லை. நல்ல கதைகள் தமிழில் இருந்து வந்தால் ஓடோடி இங்கே வந்துவிடுவேன். பான் இந்தியா படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்கிற சிந்தனையும் இல்லை. நல்ல கதைகள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த படங்களில் நடிக்க மட்டுமே ஆவலுடன் இருக்கிறேன்” என கூறினார்.

கன்னட மொழியில் ராஷ்மிகா மந்தனா நடிப்பது இல்லை என்கிற சர்ச்சை வெடித்தாலும், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் கவனம் செலுத்தி தொடர்ந்து பெரிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் புஷ்பா 2, அனிமல், சாவா என தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்துள்ள நாயகியாக பார்க்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *