அவரை திருமணம் செய்து கொண்டேனாம், குழந்தை இருக்கிறதாம்

நடிகை திரிஷா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் கடந்த 24 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக கருப்பு, விஸ்வம்பரா, ராம் ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன.
நடிகை திரிஷா சினிமாவிலிருந்து விலகப்போவதாக தகவல் ஒன்று கடந்த சில நாட்களாக உலா வருகிறது. இந்த நிலையில், இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை நடிகை திரிஷா வெளியிட்டுள்ளார்.
திரிஷா கொடுத்த ஷாக்
“நான் படங்களை விட்டுவிட்டேன், ஒரு பணக்கார வியாபாரியை திருமணம் செய்துகொண்டேன், நேற்று தான் இரண்டாவது பிறந்தநாள் கொண்டாடிய நான்கு குழந்தைகளையும் வளர்த்து கொண்டிருக்கிறேன். இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா இதில், இல்லை கற்பனை அளவு முடிந்துவிட்டதா?” என பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம், நடிகை திரிஷா தன்னை பற்றி பரவி வந்த விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.






