அறிவுக்கரசிக்கு ஷாக் கொடுத்த ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ

சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. முதலில் தலைமறைவாக சுற்றி வரும் குணசேகரன் மற்றும் தம்பிகள் தற்போது ஒரு முடிவு எடுத்து இருக்கின்றனர்.
தம்பிகளை விட்டுவிட்டு தற்போது குணசேகரன் மட்டும் தனியாக செல்கிறார். மறுபடியும் பார்ப்போமா இல்லையா என தெரியவில்லை என தம்பிகளிடம் எமோஷ்னலாக பேசிவிட்டு போகிறார் குணசேகரன்.
ஜாமீன் கேன்சல்
மறுபுறம் அறிவுக்கரசி தரப்பு வீட்டில் ஜனனி மற்றும் மற்ற பெண்களிடம் வாக்குவாதம் செய்கிறது. அப்போது ஜனனி அவர்களுக்கு ஒரு ஷாக்கிங் செய்தியை சொல்கிறார்.
அறிவுக்கரசி ஜாமீன் கேன்சல் ஆக போகிறது, போலீஸ் வந்து நாளை காலை கைது செய்து கொண்டு செல்ல போகிறது என்பது தான் அது. ப்ரோமோவை பாருங்க.






