அப்பாடா ஒருவழியா முடிச்சிட்டாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

அப்பாடா ஒருவழியா முடிச்சிட்டாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்


விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த சில வாரங்களாகவே பாண்டியன் மற்றும் அவர் மனைவி கோமதி இருவரும் பேசாமல் இருப்பதால் நடக்கும் சம்பவங்கள் தான் காட்டப்பட்டு வந்தது.

தனக்கு தெரியாமல் கதிருக்கு திருமணம் செய்து வைத்தது பற்றி கோபமான பாண்டியன் பேசாமல் இருக்க, அவரை சமாதானப்படுத்த பல முயற்சிகள் செய்தார் கோமதி.

அடுத்த வார ப்ரோமோ

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாண்டியன் மற்றும் கோமதி இருவரும் மாறி மாறி மன்னிப்பு கேட்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருகிறார்கள்.

“அப்பாடா ஒரு வழியா இதை முடிச்சிட்டாங்க..” என ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.  அடுத்த ட்ராக் சரவணன் மயில் பிரச்சனை, செந்தில் லஞ்சம் வாங்கிய பிரச்சனையை காட்டுங்க எனவும் கேட்க தொடங்கி இருக்கின்றனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *