அப்படி போடு, குணசேகரனை அழிக்க அறிவுக்கரசியுடன் இணையும் ராணா… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத கதைக்களத்துடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது.
கதையில் ஈஸ்வரி வந்தால் குணசேகரன் அழிவு காலம், அடுத்து பெண்கள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள் என்று தான் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் ஈஸ்வரி பழைய விஷயங்கள் அனைத்தையும் மறக்க ஜனனி இப்போதும் போராடிக் கொண்டிருக்கிறார்.
இதற்கு இடையில் ஈஸ்வரி சொன்ன வார்த்தையால் அறிவுக்கரசியை குணசேகரன், கதிர், ஞானம் வெளியே அனுப்புகிறார்கள்.
இந்த டுவிஸ்டை எதிர்ப்பார்க்காத ரசிகர்கள் அடுத்து என்ன நடக்குமோ என இருந்தனர்.
புரொமோ
குணசேகரன் வீட்டைவிட்டு வெளியே அனுப்பப்பட்ட அறிவுக்கரசிக்கு ஒரு போன் வருகிறது. அது வேறுயாரும் இல்லை குணசேகரனை அழிக்க நினைக்கும் ராணா தான்.
குணசேகரன் வீட்டைவிட்டு அனுப்பிவிட்டானா என கேட்க அறிவுக்கரசி நீ யார் என்கிறார். எதிரிக்கு எதிரி நண்பன், சீக்கிரம் சந்திப்போம் என்கிறார். கதையில் வில்லன்கள் இணைந்த இந்த டுவிஸ்டை எதிர்ப்பார்க்காத ரசிகர்கள் அப்படி போடு, கதை விறுவிறுப்பாக இருக்குமே என கமெண்ட் செய்து வருகின்றனர.
இதோ எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் ஸ்பெஷல் புரொமோ,






