வெடிக்கும் சண்டை, அய்யனார் துணை குடும்பத்தில் பிரிவு ஏற்படுமா!! ப்ரோமோ இதோ
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் காட்சிகள் குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அய்யனார் துணை
ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக இருக்கும் அய்யனார் துணையில் தற்போது சேரன் – சந்தா திருமணம் பல போராட்டங்களை தாண்டி நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த கையோடு இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அப்போது சந்தாவின் தாய் தொடர்ந்து நிலாவிடம் வேலை சொல்லிக்கொண்டே இருந்தார். இது நிலாவின் தாய்க்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
ப்ரோமோ வீடியோ
இந்த நிலையில், வரும் வாரம் அய்யனார் துணை சீரியலில் நடக்கப்போகும் காட்சிகள் குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், சந்தாவின் தாயார் சமைப்பதற்காக நிலாவிடம் வேலை சொல்லிக்கொண்டே இருப்பதை பார்த்து கோபமடைந்த நிலாவின் தாய், அவருடன் சண்டை போடுகிறார்.
பின், நிலாவின் ரூம்-க்கு அனைவரும் வர, ‘நிலாவிற்கு மட்டும் ஏன், இவ்வளவு பெரிய ரூம், AC-எல்லாம் போட்டு இருக்கீங்க’ என சாந்தாவின் தாய் கேட்க, ‘என் மகள் நிலா ரொம்ப வசதியா வாழ்ந்தவள், உங்க பொண்ணு மாதிரி கிடையாது என நிலாவின் தாய் கூறினார். இதனால் இரு குடும்பங்களுக்கு இடையே கடும் சண்டை ஏற்படுகிறது.
குடும்பத்தில் பிரிவு ஏற்படுமா?
இந்த பிரச்சைக்கு பின், சேரன், சோழன், பாண்டியன் மற்றும் பல்லவன் பேசிக்கொண்டிருக்கும் போது, ‘அடுத்து வானதி இந்த வீட்டிற்கு வந்தால் மூவரும் மாத்தி மாத்தி சண்டை போட்டுக்கொள்வார்களா?’ என வருத்தத்துடன் கேட்கிறார் பல்லவன்.
