பிக்பாஸ் 10 போட்டியாளரின் தாயார் திடீர் மரணம்.. அவர் எடுத்த அதிரடி முடிவு..
பிக்பாஸ் 10
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது, இப்போது 10வது சீசன் கடந்த செப்டம்பர் 6ம் தேதி துவங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
7 சீசன்கள் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வர கடந்த 2 சீசன்களை தொகுத்து வழங்கிய நிலையில் இப்போது 10வது சீசன் தொகுத்து வழங்குகிறார்.
இந்த சீசனில் தேர்வு செய்யப்பட்ட நபர்களை 3ஆக பிரித்து நிற்க வைத்து அங்குள்ள மக்களை ஓட்டு போட வைத்து இருவரை உள்ளே அனுப்பி குறைந்த வாக்குகளை பெற்ற ஒருவரை வெளியே அனுப்பினார்கள்.
அப்படி மொத்தம் 19 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர்.
சோகம்
இந்த பிக்பாஸ் 10வது சீசனில் பிளாக் பாண்டி உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் பிக்பாஸ் 10 போட்டியாளர் ஒருவரின் தாயார் இறப்பு செய்தி வந்துள்ளது.
அதாவது போட்டியாளர் மணிவண்ணன் தாயார் இறந்துள்ளாராம், அவர் வெளியே செல்ல விரும்புகிறாரா என கேட்கப்பட அதற்கு அவர் வீட்டில் இருக்கிறேன் என கூறியுள்ளார்.
பின் அவரது அம்மா இடம்பெறும் ஒரு வீடியோ பிக்பாஸ் 10 வீட்டிற்குள் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
