அக்காக்களுக்கு ஷாக்கிங் உண்மை கூறிய ஜனனி… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் வில்லன்கள் கை ஓங்கிய கதையாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.
கதையில் குணசேகரன் செய்த தவறுக்கு அவருக்கு தண்டனை கிடைத்தே ஆக வேண்டும் என போராடி வருகிறார் ஜனனி, அதற்கு ஆதரவாக இருந்த ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி இப்போது அவரை மன்னித்து விடலாம் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டனர்.
ஆனால் ஜனனி, யார் மாறினாலும் எனது முடிவில் உறுதியாக உள்ளேன் என அதற்கு போராடி வருகிறார்.
புரொமோ
இன்றைய எபிசோடின் புரொமோவில், கதிர் இவள் தான் என் அண்ணனை எங்கேயோ மறைத்து வெச்சிருக்கா என போலீஸிடம் கூறுகிறார்.
ஜனனி அவரை காப்பாற்ற நான் ஏன் உங்களிடம் இருந்து மறைத்து வைக்க வேண்டும் என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.
பின் சக்திக்கு ஜனனி அவருக்கு ஜாமீன் கேன்சல் ஆனது குறித்து பேசுகிறார்.
அடுத்து ஜனனி, ஈஸ்வரி, ரேணுகா, நந்தினியிடம், ராவணன் யார் தெரியுமா தேவகி மகன் என கூற நந்தினி-ரேணுகா ஷாக் ஆகிறார்கள்.
