ஜனனி, ராவணன் இருவரும் போடும் பிளான், கடைசியில்… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
குணசேகரன் இளம் வயதில் செய்த ஒரு தவறுக்கான சிக்கலில் தான் இப்போது மாட்டிக்கொண்டுள்ளார்.
ராவணனின் அம்மா கொன்ற குணசேகரனை பழிவாங்கும் கதைக்களம் தான் இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது. குணசேகரன் குடும்பத்திற்குள் நல்லவன் போல் உள்ளே வந்த ராவணன் இப்போது மொத்தமாக குடும்பத்தின் கண்ட்ரோலை தனது கைக்குள் வைத்துள்ளார்.
‘இதற்கு இடையில் நேற்றைய எபிசோடில், தர்ஷினி, தனது அம்மா-சித்திகளிடம் ஜனனி மற்றும் ராவணன் பற்றிய உண்மைகளை கூற அவர்கள் ஷாக் ஆகிறார்கள்.
இன்னொரு பக்கம் ராவணன் அடியாட்களை வைத்து VKவை கடத்திவிட்டார்.
புரொமோ
கண்ணதாசன் என்பவர் ஜனனிக்கு போன் செய்து முக்கியமாக விஷயம் கூற வேண்டும் என போனில் தெரிவித்திருந்தார். ஜனனி அவரைப் பார்த்து என்ன விஷயம் என்பதை அரிய தனியாக இராமேஸ்வரம் கிளம்புகிறார்.
ஆனால் ராவணன் தன்னைப் பற்றிய உண்மை யாருக்கும் தெரிய கூடாது, கண்ணதாசன் எனக்கு உதவினால் பரவாயில்லை, ஜனனிக்கு உதவுகிறார் அதனால் அவரை முடித்துவிடுங்கள் என்கிறார்.
இராமேஸ்வரம் சென்று ஜனனி தன்னைப்பற்றி தெரிந்துகொள்ள கூடாது என வீட்டில் சாமி கும்பிடும் நாடகம் போடுகிறார் குணசேகரன்.
இதோ பரபரப்பு புரொமோ,






