இன்னொரு பிரச்சனையை ஜனனி பக்கம் திருப்பிவிட்ட ராவணன்… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
ஜனனி என்ற கதாபாத்திரத்தை எடுத்தால் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் வில்லன்களின் கதையாகவே இருக்கும்.
ஒரு வில்லனே இன்னும் அழியவில்லை, அவரை கொடூரமான வில்லனை இறக்கி இயக்குனர் மக்களுக்கு Villainsm பற்றி நன்றாக காட்டி வருகிறார். ஆனால் சீரியல் குழுவினர் சொன்னது போல பெண் எழுச்சி பற்றிய ஒரு கதையும் இல்லை.
ராவணன் மீது ஜனனிக்கு சந்தேகம் இருந்தாலும் இப்போது மதிவதனி வீட்டிற்கு சென்ற பிறகு அவர் மீது கடும் கோபத்தில் உள்ளார்.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், மதிவதனி வீட்டிற்கு வந்த ராவணன் நான் குணசேகரனுக்கு உதவி செய்வதால் உனக்கு என்ன பிரச்சனை என கேட்க ஜனனி உதவி செய்பவன் எதற்கு எல்லாம் மறைக்கனும் என கேள்வி எழுப்புகிறார்.
அவர் விட்டிற்கு வருவதற்குள் ராவணன் வீட்டிற்கு வந்து என் மனைவியுடன் விவாகரத்து நடந்துவிட்டது, மதிவதனி என் மனைவி. அவள் என் குழந்தையை பார்க்க விடவில்லை, அதற்கு ஜனனியும் ஆதரவாக இருக்கிறார் என கூறுகிறார்.
இதைக்கேட்டதும் வீட்டிற்கு வந்த ஜனனியிடன் சண்டை போடுகிறார்கள் குணசேகரன் மற்றும் கதிர்.






