ஈஸ்வரி சொன்னதை கேட்டு ஷாக், கதறி அழும் விசாலாட்சி… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
ஆணாதிக்க எண்ணம் கொண்ட குணசேகரனிடம் சிக்கித்தவிக்கும் அவரது வீட்டுப் பெண்கள் எல்லா பிரச்சனைகளையும் சமாளித்த எதிர்நீச்சல் அடித்து வாழ்க்கையிலும் வெற்றிப்பெறும் கதையாக எதிர்நீச்சல் சீரியல் இருக்கும் என கூறப்பட்டது.
ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை, வில்லனாக இருக்கும் குணசேகரன் கதாபாத்திரம் தான் பெரிய தவறுகள் செய்தாலும் அந்தப் பிரச்சனையை பணம், அதிகாரம் வைத்து சமாளித்து மீண்டும் எதிர்நீச்சல் போட்டு அடுத்து தவறை செய்ய தொடங்கிவிட்டார்.
குணசேகரன் செய்த தவறுகளுக்கே தண்டனை கிடைக்கவில்லை, இப்போது ராணா வேறு சேர்ந்துவிட்டார்.
புரொமோ
நேற்றைய எபிசோடில், ஜனனி-சக்தி உறவை ரத்து செய்யப்போவதாக குணசேகரன் கூற அனைவரும் ஷாக் ஆனார்கள்.
தற்போது இன்று வெளியாகியுள்ள எபிசோட் புரொமோவில், ராணா குணசேகரன் மிகவும் மன வலியுடன் இந்த முடிவை எடுத்துள்ளார் என ஒரு பேப்பரை காட்டுகிறார்.
ஆனால் விசாலாட்சி, சக்தி எனது மகன், அவனை எப்படி என்னால் விட்டுக்கொடுக்க முடியும் என அழுதபடி கூறுகிறார்.
உடனே குணசேகரன் அப்போது என்னுடைய உறவை ரத்து செய்துவிடு என்கிறார்.
பெற்ற அம்மாவின் மனசு உங்களுக்கு என்ன தெரியும் என விசாலாட்சி கூற அதே அம்மா மனதோடு நான் ஒரு முடிவை எடுத்துள்ளேன் என ஈஸ்வரி சொல்ல விசாலாட்சி ஷாக்கிங்காக பார்க்கிறார்.






