கோபத்தில் விஜயாவை அடிக்க துணிந்த ரோஹினி செயல்… சிறகடிக்க ஆசை எபிசோட்

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில், வீடு பிரச்சனை எப்போது, எப்படி முடியும் என்பது தெரியவில்லை.
ஏமாற்றி கையெழுத்து போட்ட மனோஜ் ஜாலியாக ஷோரூமிலேயே படிப்பது, சாப்பிடுவது, ரோஹினியுடன் ஜாலியாக இருப்பது என இருக்கிறார். ஆனால் வீட்டுப் பிரச்சனைக்கு சம்பந்தமே இல்லாமல் முத்து-மீனா கடனை அடைக்க போராடி வருகிறார்கள்.
முத்து கடனை அடைக்க தன்னிடம் உள்ள 2 கார், ஒரு வேனை விற்றுவிடலாம் என்ற முடிவில் உள்ளார். ரவியும், முத்து-மீனா மட்டுமே தனியாக பணம் சேர்க்கிறார்கள் கஷ்டப்படுகிறார்கள் என வருத்தப்படுகிறார். அப்போது ஸ்ருதியிடம் இந்த ரெஸ்டாரன்ட் மீது லோன் வாங்கலாமா என ரவி கேட்க அவரும் ஓகே கூறுகிறார்.
எபிசோட்
இன்றைய எபிசோடில், விஜயா அண்ணாமலையிடம் தான் வேலை செல்லப்போகிறேன் என்கிறார், பரதநாட்டிய கிளாஸ் எடுக்கப்போகிறேன் என கூற அண்ணாமலை வேண்டாம் என்கிறார்.
அதேபோல் முத்து-மீனா, மீனாவின் அம்மா என எல்லோரும் வேலைக்கு எல்லாம் வேண்டாம் என்கிறார்கள், ஆனால் விஜயா கேட்பதாக இல்லை.
அடுத்து ரோஹினி மற்றும் அவரது அம்மா வீட்டில் சீரியல் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது சீரியலில் மாமியார் மருமகள் சண்டை காட்டப்படுகிறது, மாமியாரை மருமகள் அடித்துவிடுகிறார்.
அதைப்பார்த்த ரோஹினி, அப்படித்தான் என் மாமியாரை அடிக்க முடியவில்லை என கோபமாக உள்ளது. என்னை அவமானப்படுத்திய அவரை பளார் என நான் அடிக்க முடியவில்லை, என்னை அவ்வளவு அசிங்கப்படுத்தினார் என கோபமாக கூறுகிறார்.






