ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடும் சீரியல்களில் ஒன்றாக உள்ளது எதிர்நீச்சல் தொடர்கிறது.
ஜனனி குணசேகரன் மீது அடுக்கடுக்காக கொடுத்த புகார்கள் ஒன்றிற்கு கூட தகுந்த நீதி வரவில்லை. ஜனனி வழக்கு போடுவதும் அதில் இருந்து தப்பிக்க குணசேகரன் நாடகம் போதுவது, பணம் கொடுத்து சமாளிப்பது, கொலை மிரட்டல் விடுவது என ஏதாவது செய்து தப்பித்துவிடுகிறார்.
இந்த முறை ஈஸ்வரியை தாக்கிய வழக்கில் அவருக்கு தண்டனை கிடைத்தே ஆக வேண்டும் என ஜனனி போராட அதில் இருந்து தப்பிக்க குணசேகரன் வழக்கம் போல் நிறைய விஷயங்கள் செய்துவிட்டார்.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், பந்தக்கால் நட ஜனனி சக்தியுடன் வீட்டிற்கு வந்து எல்லா விஷயங்களையும் செய்து முடிக்கிறார். அப்போது அவரிடம், இந்த குடும்பத்திற்கு ஆகாதவர்களுடன் நீ சேர்ந்து நிற்கிற, நம்ம குடும்பம் என்று நினைத்தால் நீ இப்படியெல்லாம் செய்ய மாட்ட, விட்டுக் கொடுப்பது தான் வாழ்க்கையே என்கிறார்.
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி, நாளை நான் கோர்ட் கண்டிப்பாக செல்வேன், தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை வாங்கி கொடுத்தே ஆவேன் என்கிறார்.
இன்னொரு பக்கம் குணசேகரன், ஈஸ்வரி கண்டிப்பா என் பக்கம் தான் என நம்பிக்கையாக உள்ளார்.






