நடிகை த்ரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீஸ் சோதனையில் தெரியவந்த விஷயம்

நடிகை த்ரிஷா தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவர் அடுத்து படங்கள் ஒப்புக்கொள்வதை தவிர்த்து வருகிறார், விரைவில் திருமணம் செய்ய இருப்பது தான் காரணம் என ஒரு செய்தி சமீபத்தில் பரவியது. ஆனால் அது துளி கூட உண்மை இல்லை என த்ரிஷா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
வெடிகுண்டு
இந்நிலையில் த்ரிஷா வீட்டுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மிரட்டல் வந்ததை தொடர்ந்து போலீசார் சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் த்ரிஷாவின் வீட்டில் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.
அதன் பிறகு தான் வந்த வெடிகுண்டு மிரட்டல் என்பது போலியானது என்பது தெரியவந்தது.






