மீனாவை கொலை செய்ய ஆள் அனுப்பிய சிந்தாமணி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து வாரம் நடக்கவிருப்பது இதுதான்

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது சிந்தாமணியை எதிர்த்து மீனா பூ வியாபாரிகள் சங்கத்தின் தேர்தலில் போட்டிபோடுகிறார். தன்னை எதிர்த்து மீனா நிற்பது சிந்தாமணிக்கு பிடிக்கவில்லை. இதனால் விஜயாவை வைத்து மீனா தடுக்கலாம் என எண்ணினார்.
மீனா இந்த தேர்தலில் நிற்க கூடாது என விஜயா சொன்னாலும், அண்ணாமலை, முத்து, ரவி, ஸ்ருதி என பலருடைய ஆதரவு மீனாவிற்கு இருப்பதால், அவர் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். மேலும், பூ வியாபாரிகள் பலரும் மீனாவுக்குதான் வாக்கு செலுத்துவோம், எங்களுடைய ஆதரவு என்றுமே மீனாக்காகதான் என கூறிவிட்டார்.
அடுத்த வாரம்
இந்த நிலையில், அடுத்த வாரத்திற்கான புரோமோ வீடியோ, இன்றைய எபிசோடின் இறுதியில் காட்டப்பட்டுள்ளது.
இதில், தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்கிற அச்சத்தில், மீனாவை கொலை செய்ய சிந்தாமணி திட்டம்போட்டுள்ளார். தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்ய மீனா வரும்போது அவரை கத்தியால் குத்த ஆள் செட் செய்து வைத்துள்ளார் சிந்தாமணி.
இந்த சமயத்தில், மீனா கத்தியால் குத்த வரும் அந்த நபர் பார்த்துவிடுகிறார். ஆனால், இதன்பின் என்ன நடந்தது என்பது தெரியவில்லை, மீனாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதா? கத்தியால் குத்த வந்த நபரால் முத்துவிற்கு ஏதாவது ஆகிவிட்டதா என்பதை பொறுத்திருந்து அடுத்த வாரம்தான் பார்க்கவேண்டும்.






